ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி மஹா குரவே நம:
உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லலெல்லாம் வாதில் வென்ற ஸ்வாமி எம்பெருமானார் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுவோம்.
ஸ்வாமி எம்பெருமானார் சாதித்த ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்களில் சில:
ஸ்ரீ பாஷ்யத்தைக் கற்க வேணும், அல்லது
திருவாய்மொழி முதலான திவ்யப் பிரபந்தங்களைக் கற்க வேணும் அல்லது
திவ்ய தேசங்களில் வாசம் செய்ய வேணும் முடியாமல் போனால்
மேலக்கோட்டை என்னும் திவ்யதேசத்தில் ஓர் இரவாவது தங்கி எம்பெருமான் கைங்கர்யத்தில் ஈடுபடவேணும் முடியாமல் போனால்
மகாபாகவதர்களுக்கு கைங்கர்யம் செய்ய வேணும் அதுவும் முடியாமல் போனால்
த்வய மந்திரத்தை அர்த்தத்தோடு எப்போதும் அனுசந்தானத்தில் கொள்ளவேணும்
ஸ்வாமி எம்பெருமானார் நமக்கு ப்ரசாதித்த அர்த்த விஷேஷங்களைத் நெறி தவறாமல் சிந்தனை செய்வோம்.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அவஸ்யம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
லக்ஷ்மிநாதனான ஸ்ரீ மந் நாராயணனே பரம்பொருள்.(தெய்வம்)
தேவதாந்தர பஜனம் கூடாது.
எம்பெருமானை மற்ற தேவதைகளுக்கு சமமாகப் பார்க்கக்கூடாது. அது பகவத் அபசாரம் ஆகும்.
பகவத் அபசாரம் கூடாது, பாகவத அபசாரம் கூடாது, அஹஸ்ய அபசாரம் கூடாது
வித்யா கர்வம், தனகர்வம் மற்றும் சாதி கர்வம் முதலானவை இல்லது இருப்போம்
சாத்வீகத் த்யாகத்துடனே வாழ கற்றுக்கொள்வோம்
உலக விஷயங்களில் ஆசை கொள்ளாது வாழக் கற்றுக்கொள்வோம்.
நான் என்ற அதந்தை இல்லது வாழக் கற்றுக்கொள்வோம்
பகவத் கைங்கர்யம், பாகவத கைங்கர்யம், ஆச்சார்ய கைங்கர்யம் ஆகியவற்றில் ஈடுபடுத்திக் கொள்வோம்.
உபசாரம் செய்யமுடியவில்லை என்றாலும் யாருக்கும் உபத்ரம் செய்யாமல் வாழ்வோம்.
இன்று தொடக்கமாக ஸ்வாமி எம்பெருமானார் காட்டிய வழியில் மட்டுமே நடப்போம் என்று உறுதி மொழி கொள்வோம்
வாழி யதிராஜன்!
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அவஸ்யம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
06
May
balaji ramanujadasan
August 11, 2009 at 8:55 am
Adiyen Balaji Ranujadasan
such a wonderful website which explains about sri vaishnavam. this is very useful to our bagavathas thanks…
Adiyen Ramanujadasan
srivathsan
August 11, 2009 at 9:44 am
Sri Balaji Swami
We must say thanks to swami Emberumaanar as he is the driver for the vehicle adiyaen.
Adiyaen ramanuja dasan
karthik
February 2, 2010 at 11:37 am
== நமது சாஸ்த்திரத்தில் உள்ள அறிவுகளில் எல்லாம் அரசனாக விளங்கும் மற்றும் மிகமிக ரகசியமான பகுதிகள்: ==
கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவள் மற்ற அனைவரும் தேவர்களே ஆவார்கள். 30 கோடி தேவர்களும் கிருஷ்ணரின் சேவகர்கள் மற்றும் பக்தர்கள். கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும்,பிற தேவி தேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை. காரணம் கிருஷ்ணரிடம் அனைத்தும் முழுமையாக உள்ளன.
ஆன்மீகம் என்றால் தர்மத்தின் உள்ளபடி நடத்தல், பொருள் சேர்த்தல், பௌதீக ஆசைகளை அடைதல், ஆண்டவன் திருநாட்டிற்குள் செல்லுதல் இந்த நான்கில் முதல் மூன்றை மட்டுமே பிற தேவி தேவதைகள் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே தரமுடியும். அதுவும் கிருஷ்ணரிடமிருந்து தான் பெற்றுத்தருகிறார்கள். ஆனால் இந்த நான்கையும் கிருஷ்ணர் மட்டுமே முழுமையாக தரமுடியும். அதிலும் மோக்ஷத்தை கிருஷ்ணரால் மட்டுமே தரமுடியும். தேவர்களை வணங்குவது சாஸ்த்திரத்திற்கு உட்படாத செயலாகும். மற்றும் தேவவூலகங்கள் சென்றாலும் மீண்டும் இந்த துன்பமயமான இவ்வூலகில் பிறந்தே ஆகவேண்டும். இந்த ஜடவுலக துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை,நோயிலிருந்து மீள ஒரே வழி கிருஷ்ணரை மட்டும் சரணடைந்து வழிபடுவதே ஆகும் வேறுவழியே இல்லை.
== கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் என வேதங்கள், இதிஹாசங்களும் உபநிஷத்துக்களும்.,புராணங்களில் உள்ளபடி ==
அதர்வணவேதம்: கோபால தாபனீ உபநிஷத் 1.1
சச்சிதானந்த ரூபாய க்ருஷ்;ணயாக்லிஷ்ட காரிணே நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே
”’நித்யமான ஆனந்தம்இஇருப்பு, அறிவுவை உடைய திவ்ய சொரூபரான கிருணுஷ்ணருக்கு என் பணிவான வணக்கத்தினை நான் செலுத்துகின்றேன். நான் ஏன் அவருக்கு என்னடைய வந்தனங்களை செலுத்துகிறேன் என்றால் அவரை புரிந்து கொள்வது என்பது வேதங்களை புரிந்து கொள்வதாகும். ஆகையால் அவரே உன்னதமான ஆசான் ஆவார்.”’
கோபால தாபனீ உபநிஷத் 1.3
க்ருஷ்;ணோ வை பரமம் தைவதம் ”’கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள்”’
கோபால தாபனீ உபநிஷத் 1..21
ஏகோ வசீ ஸர்வ க: க்ருஷ்ண ஈத்ய: ”’கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றும் அவரே வணக்கத்துக்கு உரியவர்”’
ஏகோ ‘பி ஸன் பஹூதா யோ ‘வபாதி: ”’கிருஷ்ணர் ஒருவரே ஆனால் அவர் எண்ணிலடங்காத ரூபங்களிலும் அவதாரங்களிலும் வெளிப்படுபவர்.”’
யத்ராவதீர்ணம் க்ருஷ்ணாக்யம் பரம் ப்ரஹ்ம நராக்ருதி:
”’வேத இலக்கியங்களிலே பரம பூரண உண்மை ஒரு நபரே என்று கூறப்பட்டுள்ளது. அவரது பெயர் கிருஷ்ணர்.”’
கோபால தாபனீ உபநிஷத் 1..24
யோ ப்ரஹ்மாணம் விததாதி: பூர்வம் யோ வேதாம்ஷ் ச காபயதிஸ்ம க்ருஷ்ண:
”’ஆதியில் பிரம்மனுக்கு வேத ஞானத்தை உபதேசித்ததும்.. புராதன காலத்தில் வேத ஞானத்தை அளித்ததும் கிருஷ்ணரே.”’
இதையே பத்மபுராணம் : நாம சிந்தாமணிஹ் க்ருஷ்ணஸ்
”’நாமங்களில் அனைத்தைவும் விட தலைசிறந்த மணிமகுடநாமம் கிருஷ்ணா என்பதாகும்.”’
வேதங்களில் உள்ளபடி :அதர்வணவேதம் : கோபால தாபனீ உபநிஷத்தில் :
ப்ரஹ்மண்யோ தேவகீ புத்ர: ”’தேவகியின் மைந்தனான கிரஷ்ணரே முழுமுதற்கடவுள்”’
சத்சித் ஆனந்த ரூபாய க்ருஷ்ண: ”’நித்யமான ஆனந்தமயமான உருவமுடையவர் கிருஷ்ணரே.”’
== கிருஷ்ணரை மட்டும் வழிபட்டால் போதும் பிற தேவிதேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை ==
பாகவதம் 4.31.14 ஒரு மரத்தின் வேருக்கு நீர் வார்க்கும் போது அதன் அடிமரம், கிளை,மிலாறுகளுக்கு சக்தி அளிக்கின்றது. அதுபோல் வயிற்றுக்கு இடப்படும் உணவு புலன்களுக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இதுபோன்றே பக்தியால் அச்சுதனை வழிபடும் போது அவரின் பாகங்களாக விளங்கும் அனைத்து தேவர்களுக்கும் அவ்வழிபாடு திருப்திப்படுத்துகிறது.
பாகவதம் 11.5.41 முகுந்தனின் பாதகமலங்களை சரணடைந்த எவனும் எல்லா கடமைகளிலிருந்தும் விடுபட்டு பக்தி நெறியில் முழுமையாய் ஈடுபட்ட எவனும்தேவருக்கோ முனிவருக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினருக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்வித கடன் படாதவனாகிவிடுகின்றான்.
பாகவதம் 10.14.58 முக்தி அளிப்பவனும் முகுந்தன் என்ற பெயர் பெற்றவனும் பிரபஞ்ச தோற்றத்தின் அடைகலமுமான பகவானின் பாதகமலங்கலெனும் ஓடத்தை அடைந்தவனுக்கு, இவ்வுலகெனும் கடல் கன்றுகுட்டியின் குளம்பில் தேங்கிய நீர் போன்றதே. பக்தரின் நோக்கம் யாது எனில் ஒவ்வொரு அடியும் துன்பமயமான இவ்வுலகல்ல, பரமபதமான துன்பங்களேயற்ற வைகுண்டமே.
பாகவதம் : க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் ”’ கிருஷ்ணர் மட்டுமே பகவான். கிருஷ்ணரே முழுமுதற்கடவுள்”’
கிருஷ்ணருக்கு அசமேளர்த்த என்ற ஒரு நாமம் உண்டு. இதன் அர்த்தம் தனக்கு சமமானவரோ தன்னைவிட உயர்ந்தவரே இல்லாதவர் என்பதாகும்.
வேதங்களில் சில இடங்களில் பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. சில இடங்களில் சிவனிமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. மற்றும் சில இடங்களில் இந்திரன்,ஆகாயம், மற்றும் தேவி தேவதைகளிடமிருந்தும் அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. ஆனால் வேதத்தில் கூறியுள்ளபடி பார்த்தால் படைப்பின் ஆரம்பத்தில் நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்கும் கிருஷ்ணர் மட்டுமே இருந்தார் என கூறும்போது மற்ற தேவர்கள் ஆதியிலில்லை ஆதியில் கூறிய அனைத்து தேவர்களின் பெயரும் கிருஷ்ணரை மட்டுமே சேரும் என வேதஇதிஹாசஉபநிஷத் புராணங்களில் கூறுகிறது.
அதர்வணவேதம் : நாராயணோபனிஷத்தில் : ஏகோவை நாராயண ஆஸீன் ந ப்ரஹ்மா ந ஈஷானோ நாபோ நாக்னி ஸமௌ நேமே த்யாவாப்ருதீவி ந நக்ஷத்ராணி ந ஸூர்ய: ஸ எகாகீ ந ரமேத தஸ்ய த்யானாந்த: ஸ்தஸ்ய யத்ர சாண்டோகை: க்ரிய மாணோஷ்டகாதி ஸம்ஜ்ஞகா ஸ்துதி ஸ்தோமலு ஸ்தோமம் உச்யதே.
”’படைப்பின் ஆரம்பத்தில் நாராயணர் மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்கும் கிருஷ்ணர் மட்டுமே இருந்தார்.”’
இதே விசயம் கீதை 10.8 ல் : அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
நானே எல்லாவற்றின் உற்பத்தி மூலம் எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன என்கிறார் கிருஷ்ணர்..
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே
”’நாராயணனிடமிருந்தே பிரம்மன் உண்டானார் நாராயணனிடமிருந்தே ருத்ரன் என்னும் சிவன் உண்டானார்.”’
ப்ரச்நோபனிஷத் மற்றும் பராசர பரதர்ம சாஸ்த்ரம்: ப்ரஹ்மாணாம் இந்த்ரம் ருத்ரம் ச யமம் வருணமேவ ச நிக்ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரிஹோச்யதே
”’பிரம்மன்,இந்திரன், ருத்ரன், யமன், வருணன் ஆகியவரை ஹரிப்பதனால் ஹரி என்று சொல்லப்படுகிறான்”’
யஜூர்வேதம் கடோபனிஷத்தில்: ஸோத்எந: பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம்பதம்
”’எவன் சம்சாரத்திற்கு அக்கரையை அடைகின்றானோ அதுவே விஷ்ணுவின் பரமபதம்”’
இதே விசயம் கீதை 8.21ல் யம் ப்ராப்ய ந நிவர்த்தந்தே தத் தாம பரமம் மம
”’எதை அடைந்த பின் மீண்டும் இந்த ஜடவுலகில் பிறப்பதில்லையோ அந்த இடம் என்னுடையது எனகிறார் கிருஷ்ணர்.”’
அதர்வணவேதம் : கோபால தாபனீ உபநிஷத்தில்
எதஸ்யைவ யஜநே சந்த்ரத்வஜோ கதமோஹமாத்மாநம் வேதயதி ஓங்காராதிகம் மநுமாவர்த்தயேத் ஸங்கரஹித: அப்பாநயத் தத் விஷ்ணோ பரமம்பதம் ஸதா பச்யந்தி ஸூரய: திவீவ சக்ஷஷுராததம் தஸ்மாதேநம் நித்யமாவர்த்தயேத் நித்யமா வர்த்தயேதிதி.
”’இந்த கோபாலமந்திரத்தை ஜபம்செய்து சந்திரனைத்தலையில் கொண்ட சிவன் மோஹம் நீங்கப்பெற்றவனாய் பரமாத்மாவை அறிந்தான். ஆகையால் பலனில் பற்றற்றவனாய் கோபாலமந்திரத்தை ஓங்காரத்துடன் பல தடவை படிக்கக்கடவன். இதை ஜபித்த சிவனும் பரமாத்மாவை ஸாக்ஷத்கரித்து விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை அடைந்தான். எப்பொழுதும் நித்ய ஸூரிகள் பார்க்கிறார்கள். அப்பரமபதம் ஆகாயத்தில் விளங்குபவனும் உலகெல்லாம் கண்ணாயிருப்பவனுமான ஸூர்யனைப்போல் பிரகாசிக்கிறது. ஆகையால் இம்மந்திரத்தை தினந்தோறும் ஜபிக்க வேண்டும்.”’
சந்த்ரத்வஜோ (அ)கமத் விஷ்ணோ பரமம்பதமவ்யயம்
சந்திரனைத்தலையில் கொண்ட சிவனும் விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை அடைந்தான்.
வ்ருஷபத்வஜ வந்த்யாய பார்த்தஸாரதயே நம:
ரிஷபக்கொடியோனால் (சிவன்) பூஜிக்கப்பட்டவனும் அர்ஜுனனுக்கு ஸாரதியான பெருமானுக்கு நமஸ்காரம்
மேலே கூறிய வேத விசயங்கள் பார்க்கும் போது சிவபெருமான் கிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தரே ஆவார்
முக்தலோபனிஷத்தில்: புருஷோ நாராயண: பூதம்பவ்யம் பவிஷ்யச்ச ஆஸீத் ஸஏஷஸர்வேஷாம் மோக்ஷதச்ச ஆஸீத்
புருஷனாகிய நாராயணன் சென்றவைகளும் வருபவைகளும் இருப்பவைகளும் ஆனார். அவர் எல்லோருக்கும் மோக்ஷத்தை கொடுப்பவராவும் ஆனார்.
ஸாமவேதம் மஹோபனிஷத்தில் :அத புநரேவ நாராயணஸ்ஸோ(அ)ந்யம் காமம் மநஸா த்யாயீத தஸ்யத் யாநாந்தஸ்தஸ்ய லலாடாத் த்ரயக்ஷஸ் ஸூலபாணி புருஷோ (அ)ஜாயத்
”’மறுபடியும் நாராயணன் மனத்தினால் ஸங்கல்பித்து முடிந்ததும் நெற்றியிலிருந்து முக்கண்ணனும் சூலபாணியுமான புருஷன் உண்டானான்.”’
சாந்தோக்யத்தில் : விரூபாக்ஷாய ப்ரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்ட்டாய ச்ரேஷ்ட்டாய
”’முக்கண்ணனும் ப்ரம்மாவின் முதல் புத்ரனும் ச்ரேஷ்டனுமான சிவனுக்கு”’
சாஸ்வதம் சிவம் அச்யுதம் உண்மையில் சிவம் என்பது அச்யுதனே.
ஆத்மோபநிஷத்தில் : சிவ ஏவ ஸ்வயம் ஸாக்ஷாத் அயம் ப்ரஹ்மவிதுத்தம்
பிரம்மாகிய நாராயணனை அறிந்தவரில் சிவன் சிறந்தவரே.
தத்ஸர்வம் வை ஹரேஸ்தநு: உலகனைத்தும் விஷ்ணுவின் சரீரமே ஆகும்.
ஏகோஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஸந:
நாராயணன் ஒருவனே ப்ரளயத்தில் இருந்தான். பிரம்மனுமில்லை சிவனுமில்லை.
ப்ரஹ்மா நாராயண: சிவஸ்ச நாராயண: நாராயண ஏவேதம் ஸர்வம்
பிரம்மனும் நாராயணனே சிவனும் நாராயணனே நாராயணனே இவ்வுலகனைத்தும் ஆவான்
நிஷ்கலங்கோநிரஞ்ஜநோ நிர்விகல்போ நிராக்யாத: ஸஷுத்தோ தேவ ஏகோ நாராயண: நத்விதீயோ(அ)ஸ்தி கஸ்சித்
ஸ்வரூபரூப குணங்களில் எவ்விதக் குற்றமும் அற்றவனாய், ப்ராக்ருதமான குணங்களும் பெயர்களும் அற்றவனாய், சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே. இரண்டாமவன் ஒருவனுமில்லை.
தைத்திரீய நாராயணவல்லியில் : நாராயண பரம்ப்ரஹ்ம தத்வம் நாராயண பர: நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண பர்யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மிந் த்ருச்யதே ச்ரூயதேபிவா அந்தர்பஹி: ச தத்ஸர்வம் நாராயண: ஸ்தித:
”’பரம்ப்ரஹ்மம் நாராயணனே, உயர்ந்த உண்மையான வஸ்து நாராயணனே, உயர்ந்த ஆத்மா நாராயணனே, இவ்வுலகத்தில் காண்பனவும் கேட்பனவமான எல்லா வஸ்துக்களிலும் உள்ளும் புறமும் நுழைந்து நிறைந்திருப்பவன் நாராயணனே.”’
ரிக்வேத புருஷசூக்தத்தில் : உதாம்ருதத்வஸ்யேஸாந: ஹ்ரீஸ்ச தே லக்ஷமீஸ்ச பத்ந்யௌ இஷ்டம் மநிஷாண
”’மோக்ஷத்தை அளிக்கவல்ல தலைவன் புருஷன் என்னும் நாராயணனே. லக்ஷமிதேவியும் பூமிதேவியும் பரம புருஷனாகிய உன்னுடைய பத்தினிகள். உன்னிடம் நாங்கள் விரும்பியது அனைத்தும் பெறக்கடவோம்.”’
ரிக்வேத மண்டலத்தில் 1.5.22.5: தத் விஷ்ணோ: பரமம்பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
விஷ்ணுவினுடைய மேலான பரமபதத்தை எப்பொழுதும் நித்ய ஸூரிகள் பார்க்கிறார்கள்.
ஸஷுபாலோபநிஷத்தில் : தாதா விதாதா கர்த்தா விகர்த்தா திவ்யோ தேவ ஏகஏவ நாராயண: உத்பவ ஸம்பவோ திவ்யோ தேவ ஏகோ நாராயண:
அனைத்தையும் தரிப்பவனும் அனைத்தையும் விதிப்பவனும் செய்பவனும் சிறந்த விகாரங்களை உடையவனும் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே. பலவித அவதாரங்களை எடுப்பவன் பரமபதத்திலிருக்கும் தேவனான நாராயணன் ஒருவனே
மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸஷுஹ்ருத் கதி நாராயண:
தாய், தந்தை, ஸஹோதரன் முதலான எல்லா உறவாகவும் புகலிடமாகவும் உபாயமாகவும் நண்பனாகவும் கதியாக இருப்பவன் நாராயணன் ஒருவனே
யஜுஸ் ஸம்ஹிதா 5.5 அக்நிரவமோ தேவதாநாம் விஷ்ணு: பரம:
தேவதைகளுக்குள் அக்னி கீழ்நிலையில் இருப்பவன். விஷ்ணு தனக்குமேல் ஒருவரில்லாத மேல் நிலையில் இருப்பவன் நாராயணனே .
நாராயணோபனிஷத்தில் : விஷ்ணு மஹேஸ்ராக்யைர் நாராயணாம் ஸைஸ் ஸத்வதமோகுண ப்ரதாநை:
”’நாராயணரின் அம்சங்களாய் ஸத்வதமோகுணத்தில் வருபவர்கள் விஷ்ணு மஹேஸ்வரர்களே.”’
விஷ்ணுபுராணம்: பகவான் என்பவர்க்கு அளபரிய சக்தி, செல்வம், அழகு, புகழ், அறிவ, துறவு இவை முழுமையாக இருக்க வேண்டும். இவை பகவான் கிருஷ்ணரிடம் மட்டுமே உள்ளது. பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப்பட்டிருக்கிறது. தேவர்கள் முனிவர்கள் மற்றும் பிறருக்கு பகவான் புருஷன் என்று சொல்லப்படுவது ஒப்புக்காக மட்டுமே ஆகும். ஜனார்தனான பகவான் படைத்தல் காத்தல் அழித்தலுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். பகவானே உன் முன்னால் யார் யார் முன் வந்து நிற்கின்றார்களோ அவர்கள் அனைவரும் உன்னால் படைக்கப்பட்டவர்களே, நீரே அனைவருக்கும் ஆதி மூலம்.
பாகவதம் : பகவான் விஷ்ணு வாமன அவதாரத்தில் ஆகாயத்தை அளந்தபோது, விஷ்ணுவின் பாதங்களை பிரம்மா கழுவினார், அந்த நீரே கங்கை ஆகும். அதை சிவன் தன் தலையில் தாங்கியதாலே மங்களமானார்( சிவன் ஆனார்).
பரமபுருஷ பகவான் கிருஷ்ணரின் திரிபடைந்த நிலையான முக்குணங்களுக்கு ஏற்ப பிரம்மா ராஜஸகுணமாகவும், விஷ்ணு சத்வகுணமாகவும், சிவன் தாமஸகுணமாகவும் வருகின்றனர். கிருஷ்ணர் மட்டுமே முழுமுதற்கடவுள் மற்றவர்கள் அவரின் விரிவங்கங்களே.
வாமனபுராணம், விஷ்ணுபுராணம், பத்மபுராணம், வராகபுராணங்களில்: பகவான், புருஷன் என்ற சப்தம் இயற்கையாகவே ஸனாதனனான வாஸூதேவனுக்கே சொல்லப் பட்டிருக்கிறது. வாமனபுராணத்தில்: நாராயணன் முதலிய நாமங்கள் பிற தேவர்களை குறிக்காது. ஆனால் மற்ற தேவர்களின் நாமங்கள் விஷ்ணுவை மட்டுமே சேரும். நாராயணன் முதலிய நாமங்களை தவிர பிற நாமங்களை பிற தேவர்களுக்கு வழங்கினான்.
== வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான் ==
பத்மபுராணம், பாகவதத்தில் 12.13.16 வைஷ்ணவானாம் யதா சம்பு: வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான்
மஹாபாரதத்தில் : விஷ்ணுராத்மா பகவத் சிவஸ்ய சிவனுக்கு ஆத்மா விஷ்ணு
யாதொரு (விஷ்ணுவின் தொப்புளில் தோன்றிய ) தாமரையில் பிரம்மன் உண்டானார். பிரம்மனிடமிருந்து சிவன் உண்டானார். சிவனிடமிருந்து முருகன் உண்டானார். வேதத்தில் உள்ள அதர்வசிரஸில் சிவநாமங்களே பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அந்த நாமங்கள் அனைத்தும் தன்னுடைய நாமங்களாகவே ஓத வேண்டும் என கிருஷ்ணர் கூறுகிறார்.
பத்மபுராணத்தில் : விஷ்ணுவிடம் பக்தியுடையவனே தேவன் மற்றவன் அசுரன். உதாரணம் ராவணன் சிவனின் பக்தன் மற்றும் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தர் இருவரும் அசுரர்களே ஆவார். ஆனால் பிரஹலாதன் ஹிரண்யகசிபுவான அசுரரின் மகன் ஆனால் அவன் விஷ்ணுவிடம் பக்தி செய்ததால் மிகச்சிறந்த பக்தன்
சிவன் கூறுகிறார் : எல்லா வழிபாட்டிலும் விஷ்ணு வழிபாடே சிறந்தது. அதை விட அவரின் பக்தரை வழிபடுவதே மிகச் சிறந்தது. காசியில் இறப்பவர்கள் காதில் ராம நாமத்தை கூறியே முக்தியளிப்பதாக கூறுகிறார். ராம நாமமே ஒராயிரம் விஷ்ணு நாமத்திற்கு சமமானது எனவும், ராம நாமத்திலே தான் ஆனந்மடைகிறேன் என் கூறுகிறார். பதிவிரதை எவ்வாறு புருஷனை பூஜிக்கிறாளோ அவ்வாறு பகவான் கிருஷ்ணரை தான் பூஜிப்பதாக கூறுகிறார். வேதத்தில் ஸ்ரீசூக்தத்தில் லக்ஷமியின் தவப்பலனாலேவில்வம் வந்தது என கூறுகிறது. லக்ஷ;மியின் பக்தன் சிவன் எனவே வில்வஇலையை தன் தலையில் தங்குகிறார்.
கருடபுராணத்தில் : பகவான் கிருஷ்ணா; ஒரு பக்தரை காக்க என்னினால் அவரை அழிக்க யாராலும் முடியாது. கிருஷ்ணர்; ஒருவரை அழிக்க என்னினால் அவரை யாராலும் காக்க முடியாது. உதாரணம் ராவணன் சிவனின் பக்தன். ஆனால் ராமர் அழிக்கும் போது சிவனால் காக்கமுடியவில்லை. அதுபோல் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தன். ஆனால் நரசிம்மர் அழிக்கும் போது பிரம்மாவால் காக்க முடியவில்லை . அதுபோல் கிருஷ்ண பக்தனான அம்பரீசனை துர்வாசர் அழிக்க முயன்றபோது சுதர்சன சக்கரம் துர்வாசரை அழிக்கவந்தது. துர்வாசமுனிவர் பிரம்மா, சிவன் போன்ற தேவர்களை சரணடைந்தும் அவர்களால் காக்கமுடியவில்லை.
வாஸூதேவவோ வா இதம் அக்ர ஆஸீன் ; ந ப்ரஹ்மா ந ச சங்கர
வாஸூதேவன் மட்டுமே ஆதியில் இருந்தார் பிரம்மனுமில்லை சங்கரனுமில்லை.
ஹஸ்தே(அ)க்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம் ஸ்வமஸ்ததே கேஸவபாத தீர்த்தம் ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்தரம் சிவம் மஹாபாகவதம் ஸ்மராமி
”’ கையில் துளசிமணிமாலையும், நெஞ்சில் ராம தத்வத்தையும், தன் தலையில் கேசவனின் பாததீர்த்தமான கங்கையையும், நாவின் நுனியில் தாரகமான ராம மந்திரத்தையும் தரித்து நிற்கும் சிவனை மஹாபாகவதனாக அறுதியிடுகிறேன்.”’
ஏழு ஜென்மம் சூரியனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் சிவனின் பக்தனாக பிறக்கிறான். ஏழு ஜென்மம் சிவனுக்கு பக்தனாயிருப்பவன் அவனருளால் முடிவில் விஷ்ணு பக்தனாக பிறக்கிறான்.
விஷ்ணுபுராணத்தில் : பகவான் கிருஷ்ணர் சிவபெருமானிடம் கூறுகிறார். கலியுகத்தில் அசுரத்தன்மையுள்ள மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள் தவறுகள் செய்துகொண்டே என்னையும் துதிப்பார்கள் அவர்கள் என்னை வணங்கிக்கொண்டே பாவகாரியங்கள் செய்துவருவதை தடுக்க நீர் உன்னை முழுமுதற்கடவுள் என கூறிக்கொண்டு சாஸ்த்திரகளை தவறாக புரிந்து கொள்ளும் படி செய்து அவர்களை திசை திருப்பி சிறிதுசிறிதாக பக்குவம் பெறும்படி செய்து முடிவில் என்னை முழுமுதற்கடவுள் என கூறி என்னை அடைய வழிவகுக்கவும். என கூறுவதாகயுள்ளது.
தவறுசெய்யும் மக்களை திசை திருப்புவதற்காகவே சிவபெருமான் தன்னை முழுமுதற்கடவுள் என கூறினார் என பத்மபுராணம் விஷ்ணுபுராணத்தில் அவரே கூறுகிறார்.
karthik
February 2, 2010 at 11:37 am
karthik
February 2, 2010 at 11:49 am
== [பத்ம புராணத்தில் : கலியுகத்தில் மனிதர்களுக்கு விமோசனம் தருவது எது?] ==
பூலோகத்தில் ஹரியின் கதையில் விருப்பம் உண்டாவதில்லை. சிலர் அக்கதையை பொய் என்று கூறுவார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் சரித்திர புத்தகம் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டுப்பக்கம் துன்பங்கள் அணுகுவதில்லை. எமராஜனும் நெருங்க அஞ்சுவான். வைஷ்ணவர்களின் பாதங்களைக் கழுவிய நீரை யாரொருவன் தன் தலையில் தரிக்கின்றானோ, அவன் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் மூழ்கிய பலனை அடைகிறான். ஒரு வைஷ்ணவனிடம் ஒரு கணம் அல்லது அரைகணம் கழித்தாலும் அவன் செய்த பாவங்கள் ஒழிந்துவிடும். குலத்தில் ஒருவன் வைஷ்ணவனாக இருந்தால் போதும், அந்தக்குலம் முழுவதுமே பாவங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடையும். காமம்,கோபம், லோபம், மோகம், மதம்,மாச்சர்யம் இவற்றினின்று விடுபட்டவனே உண்மையான வைஷ்ணவன்.
யார் ஏகாதசி விரதம் இருக்கிறானோ, எந்நேரமும் ஹரி நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டிருக்கிறானோ துளசி மாலையை கழுத்தில் அணிந்திருக்கின்றானோ, யாருடைய வீட்டில் சாளக்கிராமசிலை பூஜிக்கப்படுகிறதோ அவனே உண்மையான வைஷ்ணவன். பகவான் கிருஷ்ணருக்கு சமர்பித்த பிரசாதத்தை அமிர்தமாக கருதி உண்கிறானோ மற்றும் துளசி வளர்ப்பவன், வேதசாஸ்திரங்களை மனதில் சதா காலமும் சிந்திக்கின்றானோ ராதா அஷ்டமி அன்று விரதமிருக்கின்றானோ அவனே உண்மையான வைஷ்ணவன்.
இந்த பூலோகத்தில் ஹரி பக்தியை விட உயர்ந்ததோ ஈடு இணையானதோ சிறப்பை தருவதோ எதுவுமில்லை. ஹரி பக்தி செய்யவில்லை எனில் மனித ஜன்மம் எடுத்ததே வீண். பிரம்மாதி தேவரும் ஹரியை சந்தோஷப்படுத்தவே தவம் செய்கிறார்கள். ஹரி பக்தரின் குடும்பத்தவர் நரக வேதனை அனுபவிக்க தேவையில்லை. ஹரி நாமத்தை உச்சரித்தவன் பிற மந்திரங்களை உச்சரிக்க வேண்டியதில்லை. ஹரியின் பாதகமலதீர்த்தத்தை தன் சிரம்மேல் தாங்குபவன் பிற புண்ணியதீர்த்தங்களில் நீராட வேண்டியதில்லை. மற்றும் யாகம்,தானம், தவம் ஆகியவற்றை செய்தபலன் கிட்டும் மற்றும் மீண்டும் இவ்வூலகில் மறுபிறப்பு எடுக்கவேண்டியது கிடையாது.
ஹரியின் ஆலயத்தில் சேவை செய்பவர் பிற அனுகூலமான சேவை அவசியமில்லை. பூலோகத்தில் பெண்ணாசை என்னும் காமத்தை விடுவது கடினம், மூவுலக தேவராலும் முடியாதது, ஹரி பக்தரால் மட்டுமே முடியும். குரு பக்தியாலே மட்டுமே மனதில் பிற சலனம் ஏற்படுவதில்லை. பகவான் கிருஷ்ணரை பூஜிப்பவர்கள் மற்றவர்களால் தொழும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள் அதுதான் ஹரி பக்தியின் மகிமை. வைஷ்ணவம் என்றால் விஷ்ணுவின் மதமாகும். வைஷ்ணவனை தூஷிப்பவர்கள் மஹாபாவம் செய்தவர்களாவார்கள். அவர்கள் நாய்,நரி பிறவி எடுப்பர் மற்றும் பூத பிசாசு பீடைகளால் துன்புறுவார்கள். கஸ்தூரி மானிடமுள்ள கஸ்தூரி வாசனையும் புனுகு பூனையிடமுள்ள வாசைனை திரவியமும், கற்பூரம் எரிதவன் அதனதன் மகிமையை அறிவதில்லை. அதே போல ஹரி பக்தர்கள் அவர்களின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை.
Arvamudan,V. Thirumangalam.
October 7, 2011 at 1:17 pm
very informative. A quarry for the agnaani. commendable collection.
akgopi
March 23, 2012 at 4:01 pm
WONDERFUL WEBSITE.
ADIYEN DASAN
A.K.GOPI.
Ramachandran
November 15, 2013 at 6:44 am
Sariyana Ubadhesangal
Adiyen Dasan
V.Ramachandran