RSS

வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமி திருநக்ஷத்ரம்

21 Jun

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

தனியன்

ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம்|

ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து சந்தாரபோதகம்||

அர்த்தம்

ஸம்ஸாரக்கடலில் அமிழ்ந்த ஜந்துக்களைத் தாண்டுவிக்கும் ஓடம் போன்றதான (வாதிகேஸரி) அழகியமணவாள ஜீயரின் திருவடித் தாமரையை ஸரணடைகிறேன்.

இவர் அருளிய நூல்களில் ஒன்றான “தத்வ நிரூபணம்” என்னும் க்ரந்தத்தின் முதல் ஸ்லோகம் மற்றும் அர்த்தம்:

ஸ்லோகம்

அபயப்ரதநாமாநாம் அஸ்மத் குரும் அஹம் பஜே|

யத்கடாக்ஷாதயம் ஜந்து: அபுநர்ஜந்மதாம் கத: ||

அர்த்தம்

ஒன்றும் அறியாத விலங்கு போல் இருந்த அடியேன், எவருடைய கடாக்ஷத்தால் பிறவாமை பெற்றேனோ, அத்தகைய பெருமை பெற்ற அபயப்ரதர் என்னும் திருநாமமுடைய நம் ஆசார்யரை அடியேன் வணங்குகிறேன்.

பெரியவாச்சான் பிள்ளைக்கும், நாயனாராச்சான் பிள்ளைக்கும் சிஷ்யரான வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் திருவாய்மொழிக்குப் பதவுரையாகப் பன்னீராயிரம் க்ரந்தங்கள் கொண்டதாக அருளிச்செய்த உரை பன்னீராயிரப்படி என்று பெயர் பெற்று விளங்குகிறது.

மேலும் இவர் அருளிய க்ரந்தங்கள்:

1. திருவிருத்தம் ஸ்வாபதேஸ உரை

2. திருவாய்மொழிகளுக்கு ஒன்றோடு ஒன்று தொடர்பைச் சொல்லும் ஸம்ஸ்க்ருதபத்ய க்ரந்தமான த்ரமிடோபநிஷத் ஸங்கதி

3 தத்வங்களை விளக்கும் ஸம்ஸ்க்ருதகத்ய க்ரந்தமான தத்வ தீபம்

4 தத்வ தீபம் என்ற நூலுக்கு விளக்கமாக மணிப்ரவாளநடையில் அருளிச்செய்த வ்யாக்யானமான தீபப்ரகாஸம்

5. தீபஸங்க்ரஹம்

6 தத்வ நிரூபணம்

7 ரஹஸ்யத்ரய காரிகாவளி

8 பகவத்கீதை வெண்பா

ஆகியவை ஆகும்.

இவருடைய சிஷ்யர் – திருமாலையாண்டான் திருவம்சத்தில் அவதரித்த யாமுனாச்சார்யர்

பூர்வாஸ்ரம திருநாமம் – வரதராஜர்

உத்தம ஆஸ்ரமத்தில் இவருடைய திருநாமம் – ஸுந்தரஜாமாத்ருமுனி(அழகிய மணவாளச்சீயர்)

பல வாதிகளை ஜெயித்த காரணத்தினால் “வாதிகேஸரி” என்னும் பட்டப் பெயரையும் பெற்றார்.

வாழி எதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a comment