RSS

வைகாசி கேட்டை – ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் திருநக்ஷத்ரம்

27 May

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

தனியன்

ஸ்ரீராமமிஸ்ர பதபங்கஜ சஞ்சரீகம்

ஸ்ரீயாமுநார்யவரபுத்ரமஹம் குணாட்யம்|

ஸ்ரீரங்கராஜகருணா பரிணாம தத்தம்

ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||

தனியன் விளக்கம்

ஸ்ரீராமமிஸ்ரராம் மணக்கால் நம்பியின் திருவடித் தாமரையில் வண்டாய் இருப்பவரும், ஸ்ரீ யாமுநாசார்யாருடைய சிறந்த புத்திரரும், குணத்தில் மிக்கவரும், ஸ்ரீரங்கராஜ கருணையினாலே அளிக்கப்பெற்றவரும், ஸ்ரீபாஷ்யகாரரை சிஷ்யராகக் கொண்டவருமான திருவரங்கப்பெருமாள் அரையரைத் துதிக்கிறேன்.

வாழித்திருநாமம்:

நாதமுனி குலம்திகழ நன்கு உதித்தோன் வாழியே

நற்றமிழின் மறைக்கு இசையை நவின்று உரைப்போன் வாழியே

காதல் அரங்கேசர் இருகழல் பணிவோன் வாழியே

கானவர நயவிசையால் களிப்பிப்போன் வாழியே

ஏதமில் வண்கச்சிப்பயனை ஏத்திசைப்போன் வாழியே

எதிபதியைப் பரிசாக ஏற்று வந்தோன் வாழியே

தீதில் யமுனைத்துறைவன் சேவடியோன் வாழியே

திருவரங்கப் பெருமாள் அரையர் திருவடிகள் வாழியே

வைபவம்:

அவதார ஸ்தலம் – திருவரங்கம்

ஆசார்யன் – மணக்கால்நம்பி

சிஷ்யன் – ஸ்வாமி எம்பெருமானார்

திருநக்ஷத்ரம் – பிங்கள வர்ஷம் வைகாசி கேட்டை

திருத்தாயார் – ஸ்ரீரங்கநாச்சியார்

திருப்பாட்டனார் – ஈஸ்வரமுனிகள்

திருவாராதனம் – அழகிய மணவாளப் பெருமாள்.

அம்சம் – ஸங்கு கர்ணர் என்னும் நித்யசூரியின் அம்ஸம்

இவர் 115 திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்தார் என்று பெரியதிருமுடிஅடைவு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

இவர் ஆளவந்தாரின் திருக்குமாரர் ஆவார். ஸ்ரீரங்கநாதனின் நியமனத்தாலே காஞ்சியில் தேவப்பெருமாளைத் தம் இசையாலே மயக்கி வரம் பெற்று, யதிராஜரைத் திருவரங்கத்திற்கு அழைத்து வந்தவர். ஸ்ரீரங்கநாதனுக்கு அரையராயிருந்த இவர் எம்பெருமானார்க்கு அருளிச்செயல் சந்தையும், நல்வார்த்தைகளையும் உபதேசித்தவர். தம் தம்பிகளான தெய்வத்துக்கு அரசு நம்பி, பிள்ளை அரசு நம்பி, சொட்டை நம்பி ஆகியவர்களை எம்பெருமானாருக்கு ஸிஷ்யர்களாக்கினார்.

வாழி யதிராசன்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆழ்வார்திருவரங்கப்பெருமாள் அரையர் திருவடிகளே சரணம்

 

Leave a comment